மாவட்ட செய்திகள்

திருவாலங்காடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

திருவாலங்காடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அஜித்குமார் (வயது 26). இவர் நேற்று முன்தினம் திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து தனது உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற விரைவு ரெயில் மோதி அவர் பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு