மாவட்ட செய்திகள்

சி.எஸ்.எம்.டி.யில் கடத்தப்பட்ட 2 மாத ஆண் குழந்தை நாசிக்கில் மீட்பு பெண் கைது

சி.எஸ்.எம்.டி.யில் கடத்தப்பட்ட 2 மாத ஆண் குழந்தை நாசிக்கில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் 8-வது பிளாட்பாரத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி சுனிதா என்ற தொழிலாளி உறவினர்கள் மற்றும் 2 மாத ஆண் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். பின்னர் காலை 6.30 மணியளவில் கண்விழித்த சுனிதா கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது குழந்தை மாயமாகி இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதேபோல் மும்ராவிலும் கடந்த பிப்ரவரி மாதம் சல்மான் என்ற 10 மாத குழந்தை கடத்தப்பட்டது. எனவே அந்த கும்பலினர் தான், 2 மாத ஆண் குழந்தையையும் கடத்தி இருக்கலாம் என கருதி தானே குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது சி.எஸ்.எம்.டி. மற்றும் மும்ராவில் கடத்தப்பட்ட குழந்தைகள் கடைசியாக நாசிக் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் 2 மாத ஆண் குழந்தையை நீலம் சஞ்சய் போரா (வயது35) என்ற பெண் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் 2 மாத ஆண் குழந்தையை மீட்டனர்.

ஆனால் 10 மாத குழந்தை சல்மானை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு