மாவட்ட செய்திகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் மின்சார ரெயில் சேவை; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிகள் பயணிக்கும் வகையில் சென்னை சென்டிரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 22-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. அந்தவகையில் ஏற்கனவே 165 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக சென்னை கடற்கரை-ஆவடி, ஆவடி-சென்னை கடற்கரை இடையே தலா 2 மின்சார ரெயில் சேவைகளும், சென்னை கடற்கரை-திருவள்ளூர், திருவள்ளூர்-கடற்கரை இடையே தலா 6 சேவைகளும், மூர்மார்க்கெட்-திருத்தணி, திருத்தணி-மூர்மார்க்கெட் இடையே தலா 2 சேவைகளும் என கூடுதலாக 20 சேவைகள் அதிகரிக்கப்பட்டு, 22-ந்தேதி முதல் 185 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை