மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் கண்மாய்கள் தூர்வாரும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

அ.தி.மு.க. சார்பில் கண்மாய்கள் தூர்வாரும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

தேனி,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி, தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்மாய்கள் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 4 கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கியது. அதில் பெரியகுளம் தென்கரை பாப்பையன்பட்டி கண்மாய் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா, தாசில்தார் ரத்தினமாலா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகனும், கைலாசநாதர் கோவில் பராமரிப்புக்குழு தலைவருமான வி.ப.ஜெயபிரதீப், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கோடாங்கிபட்டி கணக்கன்குளம் கண்மாய், தேவாரம் பெரியதேவிகுளம் கண்மாய், பாலக்கோம்பை ஊசிமலைக்கண்மாய் ஆகிய கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை வி.ப.ஜெயபிரதீப் தொடங்கி வைத்தார். ஒரே நாளில் 4 கண்மாய்கள் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இந்த கண்மாய்களில் புதர்களை அகற்றி, ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் குறித்து வி.ப.ஜெயபிரதீப் கூறுகையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதல்படியும், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் அறிவுரையின்படியும் இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6 கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதன் தொடர்ச்சியாக மேலும் 9 கண்மாய்கள் தூர்வாரப்பட உள்ளன என்றார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்