மாவட்ட செய்திகள்

மாணவியை கர்ப்பமாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது

செங்குன்றம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 58). இவர், விளாங்காடுபாக்கம் கிளை அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார். இவர், 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, தனது ஆசைக்கு இணங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த மாணவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்