மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 8-வது நாளாக பெண்கள் தொடர் போராட்டம்

நாக்பாடாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மும்பை நாக்பாடாவில் உள்ள மோர்லண்டு ரோட்டில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை திடீரென ஒரு சில போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டத்தை கைவிட முடிவு செய்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட ஒத்து கொள்ளவில்லை. இதனால் போராட்ட களத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் இது குறித்த தகவல் வேகமாக பரவியது. இதனால் போராட்டத்தில் ஈடுபட அந்த பகுதியை சேர்ந்த மேலும் பல பெண்கள் அங்கு திரண்டு வந்து குவிந்தனர். இதனால் சுமார் 100 பேர் இருந்த போராட்ட களம் 1,000 பேரை தொட்டது.

இதையடுத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டத்தை கைவிடும் முடிவை கைவிட்டனர். நேற்று 8-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெண்களின் போராட்டம் நீடித்தது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்