மாவட்ட செய்திகள்

நிலுவையில் உள்ள விவசாயக்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய மந்திரிசபையில் ஒப்புதல்

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

பெங்களூரு,

தலைமை செயலாளர் மற்றும் மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிலுவையில் உள்ள விவசாயக்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது தான். தற்போது மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு படிப்படியாக 4 தவணைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதற்காக ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2019-2020-ம் ஆண்டில் ரூ.8,656 கோடி நிதி ஒதுக்கப்படும்.

அதேபோல் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.7,876 கோடியும், 2021-2022-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.7,231 கோடியும் நிதி ஒதுக்கப்படும்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்