மாவட்ட செய்திகள்

ஓசூரில் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள ரிலையன்ஸ் வணிக வளாகத்தின் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் மன்றம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

ஓசூர்,

ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள ரிலையன்ஸ் வணிக வளாகத்தின் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் மன்றம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் தளி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். இதில் நிர்வாகி மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ரிலையன்ஸ் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அத்துடன், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது முகேஷ் அம்பானியின் உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தடுக்க முயன்ற போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு