மாவட்ட செய்திகள்

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நூலகங்களை உருவாக்க வேண்டும்

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நூலகங்களை உருவாக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நடந்த சைவ சமய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தினத்தந்தி

நெல்லை,

பாளையங்கோட்டை சைவ சபையின் சார்பில் சைவ சமய மாநாடு பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று காலையில் நடந்த மொழி அரங்கத்தை செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அவ்வையின் தமிழ் அமுதம் என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ், பெரியபுராணத்தில் பெண்கள் என்ற தலைப்பில் பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் நீதிபதி மகாதேவன், யாமறிந்த புலவரிலே பாரதியை போல் என்ற தலைப்பில் நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து மணிவண்ணன், மதிவேலாயுதம், ஊரன் அடிகள் ஆகியோர் பேசினார்கள்.

மாநாட்டில், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் எல்லா வகையான பள்ளிகளிலும் பள்ளி இறுதி வகுப்பு வரை அந்தந்த மாநில மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியிலேயே கல்வி கற்பதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நூலகங்களை உருவாக்கி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த ஆவணம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு