மாவட்ட செய்திகள்

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

கு.ப.கிருஷ்ணன் பேசுகையில், லால்குடி கூகுர் முதல் கிளிக்கூடு வரை கொள்ளிடத்தில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என்றுதெரிவித்தார்.

ஜீயபுரம்,

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நேற்று அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருக்கு உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து ஏராளமான பெண்கள் வரவேற்றனர்.

அப்போது வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பேசுகையில், லால்குடி கூகுர் முதல் கிளிக்கூடு வரை கொள்ளிடத்தில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என்றுதெரிவித்தார். மேலும் அ.தி.மு.க. வெற்றி சாதனைகள் குறித்து பேசுகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. திருச்சி கிளிக்கூடு முதல் தஞ்சை மாவட்டம் வரை அ.தி.மு.க. அரசால் தான் சாலைகள் அமைக்கப்பட்டது. கொரோனா காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்ததின் காரணம், மாணவர்கள் மூலம் நோய்கள் வரகூடாது என்ற காரணத்தினால் மட்டுமே. மு.க.ஸ்டாலின் தன்னை விவசாயி என்று கூறிக்கொள்கிறார். விதை நெல்லை எப்போது விதைக்க வேண்டும். எப்போது பறித்து நட வேண்டும். எப்போது அறுவடை செய்யவேண்டும் என்று தெரிந்தால் கூறட்டும் என்று கேள்வியெழுப்பினார்.

அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பன், ஜெயக்குமார், அழகேசன், செல்வராஜ், நடராஜ், பனையபுரம் கர்ணன், தமிழர் விடுதலை கழக திருச்சி மாவட்ட செயலாளர் பனையபுரம் பி.எஸ். சங்கர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை