மாவட்ட செய்திகள்

அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

தென்காசி,

செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா மாலை அணிவித்து மரியாதை செய்தா. அதனைதொடாந்து அவர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் தங்கவேலு, பொருளாளர் ராஜா, துணை செயலாளர் பூசைராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் கந்தசாமி பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் ஜாகிர்உசேன் உள்பட பலா கலந்து கொண்டனா.

நகர சார்பில் செயலாளர் எஸ்.எம்.ரஹீம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சேக்தாவூது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் குற்றாலத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, குற்றாலம் செயலாளர் எம்.கணேஷ் தாமோதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுரண்டை நகர தி.மு.க சார்பில் நடந்த விழாவுக்கு, கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை ஆர்.கே.நகர் பகுதி திமுக செயலாளர் வக்கீல் ஜெபதாஸ் பாண்டியன் முன்னிலை வகித்து பயனாளிகளுக்கு தென்னங்கன்று, மண்வெட்டி, பால்கேன், அரிசி, மற்றும் பருப்பு வகைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

சுரண்டை பேரூர் கழக தே.மு.தி.க சார்பாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதை மாரியப்பன், சுரண்டை பேரூர் கழக செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பனவடலிசத்திரம் பகுதிகளான சண்முகநல்லூர், குருக்கள்பட்டி, மேலநீலிதநல்லூர், வன்னிக்கோனேந்தல், தேவர்குளம், மூவிருந்தாளி, அச்சம்பட்டி, புளியம்பட்டி, மருக்காலங்குளம், மேல இலந்தைகுளம் ஆகிய ஊர்களில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அண்ணாவின் உருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு