மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேறகப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மணிமேகலை விருது

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை விருதிற்காக தேர்வு செய்யும் செயல்முறைகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையில் வழங்கப்பட்டு உள்ளது.

5-ந்தேதிக்குள்

எனவே விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வரும் 5-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பிட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்