மாவட்ட செய்திகள்

போக்சோவில் ஜோதிடர் கைது

சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் ஜோதிடரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டியூரை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது 35). ஜோதிடர். கடந்த 12-ந்தேதி இவர், 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை எரியோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவிலூர் பிடாரியம்மன் கோவில் அருகே இருந்த கேட்டைச்சாமியையும், சிறுமியையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி கோட்டைச்சாமி கடத்தி சென்றதாக சிறுமி கூறினார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கோட்டைச்சாமியை கைது செய்தார். பின்னர் சிறுமியை அவருடைய பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்