திருச்சுழி,
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தாலுகா அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன், திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு சசி தரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தாசில்தார் ரவிச்சந்திரன் பேசும்போது, கிராம மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அதிகாரிகளும், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் பேசும்போது, அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமின்றி வெளியே நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், திருச்சுழி ஒன்றியக் குழு தலைவர் பொன்னுத்தம்பி, துணைத் தலைவர் மூக்கையன், நரிக்குடி ஒன்றியக்குழு தலைவர் பஞ்சவர்ணம், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் சந்தன பாண்டியன், நாகஜோதி தொல்காப்பியன், தமிழ் பாடி ராமலிங்கம், குமராயி சந்திரன், இந்து ராணி, மாவட்ட கவுன்சிலர்கள் போஸ், பாரதிதாசன், திருச்சுழி ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.