மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சியில் இருந்த போது அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

தினத்தந்தி

தாம்பரம்,

செங்கல்பட்டு அருகே உள்ள வில்லியம்பாக்கம் பஸ் நிலையத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென ஒலிக்க ஆரம்பித்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து சென்றனர். ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று ஆய்வு செய்ததில், மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர்.

ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதற்குள் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பயந்துபோன மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டது தெரிந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை