மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் கடை வாடகை கேட்ட உரிமையாளருக்கு அடி, உதை

கிருஷ்ணகிரியில் கடை வாடகை கேட்ட உரிமையாளருக்கு அடி, உதை விழுந்தது.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 8-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 29). இவர் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பகுதியில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் கிருஷ்ணகிரி, லட்சுமணராவ் தெருவை சேர்ந்த மஞ்சுநாதன் (35) என்பவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மஞ்சுநாதன் கடந்த ஓராண்டாக கடைக்கு வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகராஜ், தனது உறவினருடன் சென்று வாடகை கேட்டுள்ளார். அப்போது மஞ்சுநாத் மற்றும் இவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து அவர்களை அடித்து, உதைத்தனர். மேலும் உருட்டுக்கட்டையால் அவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதில் நாகராஜும், இவரது உறவினரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்