மாவட்ட செய்திகள்

வாலிபர் கைது

பழனியை அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பழனி:

பழனியை அடுத்த பொன்னாபுரத்தை சேர்ந்தவர் காளிச்சாமி (வயது 55). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் நிலம் உள்ளது. நேற்று பொன்னாபுரத்தை சேர்ந்த தினேஷ் (25), ஏசுராஜா (29) ஆகியோர் காளிச்சாமி நிலத்தின் அருகில் நின்று கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு நிற்கக்கூடாது என அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், ஏசுராஜா ஆகியோர் காளிச்சாமியை தாக்கினர். இதுகுறித்து காளிச்சாமி ஆயக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். ஏசுராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்