மும்பை,
நேற்று மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் மேற்கு ரெயில்வே பெண் ஊழியர்கள் நலச்சங்க தலைவர் அர்ச்சனா குப்தா இதன் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாக மேற்கு ரெயில்வேயின் மும்பை, வதோதரா, ஆமதாபாத், ரட்லம், ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் ஆகிய 6 இடங்களில் தானியங்கி நாப்கின் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேற்கு ரெயில்வேயில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் ரூபாய் நாணயங்களை போட்டு இந்த எந்திரங்களில் இருந்து நாப்கின்களை பெறமுடியும்.