மாவட்ட செய்திகள்

வியாசர்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை

வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி.நகர் 17–வது மத்திய நிழல்சாலையில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை.

பெரம்பூர்,

வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி.நகர் 17வது மத்திய நிழல்சாலையை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 34). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 20ந் தேதி ஜான்பீட்டர் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.

நேற்று காலையில் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜான்பீட்டர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி
வருகின்றனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்