மாவட்ட செய்திகள்

வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆதம்நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 58). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் கோவில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் இவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 1 பவுன் தங்க தோடு மற்றும் ரூ.18 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். விழாவிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த மாரி வீட்டில் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்