மாவட்ட செய்திகள்

ஓட்டேரி: லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை, மின்வாரிய அதிகாரி கைது

ஓட்டேரி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் சிக்கியது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெரம்பூர்,

சென்னை சேத்துப்பட்டு ஸ்கூல் சாலையை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 54). இவர், ஓட்டேரி மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர், மின் இணைப்பு வழங்கக்கோரி விண்ணப்பம் அளிக்கும் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக ஓட்டேரி மின்வாரிய அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்கள், செயற்பொறியாளர் முருகதாஸ் அறையில் தீவிரமாக சோதனை செய்தனர்.

அதில், அவரது அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் முருகதாசிடம் இரவு முழுவதும் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு முருகதாசை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன், கைதான முருகதாசை தங்களுடன் அழைத்துச்சென்றனர்.

கணக்கில் வராத அந்த பணம், அவர் மின் இணைப்பு வழங்குவதற்காக பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்றாரா? என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு