மாவட்ட செய்திகள்

வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

வேலூர்,

வேலுர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கம் வேலூர் கிளை சார்பில் வேலூர் மாவட்ட தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமை தாங்கினார். ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், சங்க மாநில உதவி செயலாளர் ஞானசேகரன், மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் வேலையை விட்டு நீக்கக் கூடாது, ஒப்பந்த ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், வேலுர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கம் வேலூர் கிளை, ஒய்வூதிய சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு