மாவட்ட செய்திகள்

பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்: 2 வாலிபர்கள் படுகாயம்

வத்தலக்குண்டு-செம்பட்டி சாலையில் பஸ்-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியை சேர்ந்த பாண்டி மகன் பிரதீப் (வயது 23), பசுங்கிளி மகன் நவீன் (19). இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார்சைக்கிளில் செம்பட்டிக்கு சென்றனர். மோட்டார்சைக்கிளை பிரதீப் ஓட்டிச் செல்ல, நவீன் பின்னால் அமர்ந்து இருந்தார். வத்தலக்குண்டு-செம்பட்டி சாலையில் புதுகோடாங்கிபட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் தனியார் நிறுவன பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்