மாவட்ட செய்திகள்

இலுப்பூரில் கஞ்சா விற்றவர் கைது

இலுப்பூரில் கஞ்சா விற்றவர் கைது

அன்னவாசல், ஜூலை.27-
இலுப்பூர் சித்திரைக்குளம் அருகே நின்று கொண்டிருந்த அழகுமதி (வயது52) என்பவரை சந்தேகத்தின் பேரில் இலுப்பூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.