மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசுக்கு தொடர்ந்து தகவல் வந்தது. இந்தநிலையில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின்பேரில், போலீசார் உத்திரமேரூர் அடுத்துள்ள திருப்புலிவனம் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு பத்திரிகையாளர்கள் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 இளைஞர்களை மடக்கி விசாரணை மேற்கொண்டார். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் அவர்கள்மீது சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் உத்திரமேரூர் காஞ்சீபுரம் சாலையில் பால் டெப்போ எதிரே வசிக்கும் ஜெகன் (வயது 19), நெல்வாய் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (22), சென்னை என்.எஸ்.கே நகரை சேர்ந்த கார்த்திக் (26) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு