மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்:

கம்பம் கோசந்திர ஓடை அருகே கம்பம் வடக்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஆதவன் (வயது 29), கோடாங்கிபட்டியை சேர்ந்த கமலக்கண்ணன் (25) என்றும், கம்பத்தில் இருந்து தேனிக்கு கஞ்சாவை கடத்தி செல்வதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...