மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை செய்ய மறுத்த 63 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை செய்ய மறுத்த 63 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தானே,

தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் கடந்த மாதம் 15ந்தேதி முதல் 30ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம், சரிபார்க்கும் பணியில் ஈடுபட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை கல்யாண் தாசில்தார் பிறப்பித்து இருந்தார். ஆனால் அரசு நிர்வாகத்தின் இந்த உத்தரவை மீறி கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியை சேர்ந்த 63 ஆசிரியர்கள் இந்த பணியை செய்யாமல் புறக்கணித்தனர்.

இதையடுத்து அந்த ஆசிரியர்கள் மீது மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் 63 ஆசிரியர்கள் மீது 2 தனித்தனி வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.

தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆசிரியர் கூட்டமைப்பினர் கோர்ட்டிற்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு