மாவட்ட செய்திகள்

நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சிபாரிசு

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் சிபாரிசு செய்துள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது.

நடிகர் சு ஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், விசாரணை திருப்திகரமாக இல்லை என்று, சு ஷாந்தின் தந்தை, பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ராஜீவ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தனிமைப்படுத்தினர்

அதன்பேரில், ராஜீவ்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சு ஷாந்த் தற்கொலை குறித்து விசாரிக்க பினய் திவாரி என்ற ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் போலீஸ் படை மும்பைக்கு சென்றது.

ஆனால், மும்பை போலீசார் ஒத்துழைப்பு அளிக்காததுடன், பினய் திவாரியை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தினர். இச்சம்பவம், பீகாரில் கடும் எதிர்ப்பை தோற்றுவித்தது.

சி.பி.ஐ. விசாரணை

இந்நிலையில், பீகார் மாநில முதல்-மந்திரி நிதி ஷ்குமார், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர் சு ஷாந்த் குடும்ப உறுப்பினர்கள், பீகார் மாநில போலீஸ் டி.ஜி.பி. குப்தே ஷ்வர் பாண்டேவை தொடர்பு கொண்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு முறையான சிபாரிசை மத்திய அரசுக்கு உடனே அனுப்பி வைக்குமாறு நான் மாநில போலீசுக்கு உத்தரவிட்டுள்ளேன். நடிகர் சு ஷாந்த் நல்ல நடிகர். அவருடைய குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.

மும்பைக்கு விசாரணைக்கு சென்ற பாட்னா போலீசாரிடம் மும்பை போலீசார் நடந்து கொண்ட விதம் சரியல்ல. மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டனர்.

இவ்வாறு நிதி ஷ்குமார் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்