மாவட்ட செய்திகள்

செம்பட்டி அருகே விபத்து, மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 தொழிலாளர்கள் பலி

செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது மில்வேன் மோதியதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

தினத்தந்தி

செம்பட்டி,

நிலக்கோட்டை அருகே உள்ள மிளகாய்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவரது உறவினர் சுரேஷ் (35). இருவரும் கூலித்தொழிலாளர்கள். நேற்று காலை 2 பேரும் கரூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக் கிளை சுரேஷ் ஓட்டினார்.

செம்பட்டியை அடுத்த காமுபிள்ளைசத்திரம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை நோக்கி சென்ற தனியார் மில் வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக் கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேன் டிரைவர் வீரமணியை (21) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குல தெய்வ கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்