மாவட்ட செய்திகள்

மத்திய ரெயில்வே மோட்டார் மேன்கள் திடீர் போராட்டம்

கூடுதல் நேரம் பணி செய்ய மறுத்து மத்திய ரெயில்வே மோட்டார் மேன்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

மும்பை,

போராட்டம் காரணமாக ரெயில்கள் தாமதமாக இயங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

மும்பையில் ரெயில் போக்குவரத்து பொதுமக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினமும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர். இந்தநிலையில் ஆள்பற்றாக்குறை காரணமாக மின்சார ரெயில் மோட்டார் மேன்களுக்கு கூடுதல் நேரம் பணி ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால், காலி பணியிடங்களில் புதிய மோட்டார் மேன்களை நியமிக்க வலியுறுத்தி நேற்று மத்திய ரெயில்வேயில் மோட்டார் மேன்கள் கூடுதல் நேரம் பணி செய்வதை தவிர்த்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நேற்று மத்திய ரெயில்வேயில் சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. வேலை முடிந்து வீடு திரும்பும் மாலை நேரம் என்பதால் ரெயில் நிலையங்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. வழக்கத்தை விட மின்சார ரெயில்கள் 10 நிமிடம் மற்றும் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஒவ்வொரு ரெயில்களிலும் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். மேலும் வாசற்படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்காண்டதையும் காண முடிந்தது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்