மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் கொரோனா நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

இதில், முன்கள பணியாளர்களான அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என 60 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பாராட்டுகளை தெரிவித்து வழங்கினார்.

பின்னர் அவர், முன்கள பணியாளர்களுக்கு விருந்து வைத்து உணவு பரிமாறிவிட்டு, அமர்ந்து தானும் உணவு அருந்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜவேல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்