மாவட்ட செய்திகள்

மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்,

நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணி, மறுமார்க்கமாக சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.45 மணி, சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே மதியம் 12.35 மணி, மறுமார்க்கமாக மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் இடையே காலை 4.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ஏப்ரல் 5-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை-திருவள்ளூர் இடையே காலை 9.55 மணி, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே காலை 10.05 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி இடையே காலை 10.15 மணி, 10.45 மணி, மதியம் 12.35 மணி, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் இடையே காலை 10.30 மணி, மதியம் 12.10 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே காலை 11 மணி, மதியம் 12.50 மணி, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே காலை 11.15 மணி, மதியம் 12.20 மணி, கடற்கரை-ஆவடி இடையே காலை 11.05 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இடையே காலை 11.30 மணி, மதியம் 12 மணி, மதியம் 1 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி இடையே காலை 11.45 மணி, கடற்கரை-திருத்தணி இடையே மதியம் 12.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ஏப்ரல் 3-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு