மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே காலை 9.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 10-ந்தேதி கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.

* கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 10-ந்தேதி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

* கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 10.08, 11.48, 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 10-ந்தேதி கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.55, 12.20, 1.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 10-ந்தேதி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30 மணி, மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 10-ந்தேதி கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்.

* கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 12.45 மணி, கடற்கரை -செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதிக்காக மதியம் 1 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை