மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது 17 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

செங்கல்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆத்ரஸ் பச்சேரா தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆத்ரஸ் பச்சேரா தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு ரெயில் நிலையம், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு கரிமேடு பகுதியை சேர்ந்த விக்கி (வயது25) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி செங்கல்பட்டு தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு