மாவட்ட செய்திகள்

வேலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலக சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலக சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளன தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரந்தாமன் முன்னிலை வகித்தார்.

இதில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். சாலை வரியை டிசம்பர் மாதம் வரை ரத்து செய்ய வேண்டும். வாகன கடன் செலுத்த டிசம்பர் மாதம் வரை அவகாசம் வழங்க வேண்டும். நலவாரிய பதிவை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்