மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி கல்லூரி மாணவர் பலி; பொதுமக்கள் சாலைமறியல்

மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்தில் பலியானார். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

வேன் மோதியது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வள்ளுவப்பக்கத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஷியாம்சுந்தர் (வயது 20). இவர் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மதுராந்தகத்தில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுராந்தகம்- வேடந்தாங்கல் சாலை சாத்தம்மை என்ற இடத்தில் செல்லும்போது, அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் ஷியாம் சுந்தர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இருந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.தகவலறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் ஆதிவாசி நகர் கிராம மக்கள் மதுராந்தகம்- வேடந்தாங்கல் சாலையில் சாத்தம்மை என்ற இடத்தில் சாலையில் குறுகிய வளைவு உள்ளதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும், சிகப்பு விளக்கு பொருத்தவேண்டும் என்று கூறி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.அப்போது சம்பவ இடத்திற்கு மதுராந்தகம் தாசில்தார் பருவதம், போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்தராஜ், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து