மாவட்ட செய்திகள்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; 19–ந் தேதி வரை நடக்கிறது

கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக ஆண்டுக்கு 2 முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இந்த ஆண்டிற்கான முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 19ந் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து கிராமங்களிலும் இந்த தடுப்பூசி போடப்படும் நாட்களில் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் பணி முடித்து தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி கோமாரி நோயை அறவே வராமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவே விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகள் மூலமாக ஏற்படும் பொருளாதார இழப்பை தடுத்திட தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்