மாவட்ட செய்திகள்

சமுதாய தலைவர்களை அவதூறாக பேசி ‘டிக்-டாக்’ வீடியோ வெளியிட்ட 3 வாலிபர்கள் கைது - மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

சங்கரன்கோவில் அருகே சமுதாய தலைவர்களை அவதூறாக பேசி ‘டிக்-டாக்‘ வீடியோ வெளியிட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமுதாய தலைவர்களை அவதூறாக பேசி டிக்-டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த டிக்-டாக் வீடியோ சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாகவும், எனவே, அந்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், பாட்டாத்தூரை சேர்ந்த மணிகண்டன் மகன் விஜயகுமார் (வயது 20) மற்றும் 17 வயதுடைய 2 வாலிபர்கள் உள்பட 5 பேர் இந்த டிக்-டாக் வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடனடியாக விஜயகுமார் உள்பட 3 வாலிபர்களை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை