மாவட்ட செய்திகள்

ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் மளிகை பொருட்களையும் டெலிவிரி செய்ய வேண்டும் - மும்பை மாநகராட்சி வேண்டுகோள்

ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் மளிகை பொருட்களையும் டெலிவிரி செய்ய வேண்டும் என மும்பை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வருகின்றனர். இதனால் மார்க்கெட், மளிகை கடைகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இதை தடுக்கும் வகையில் மளிகை பொருட்களை, மும்பை மாநகராட்சி ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவிரி செய்ய வேண்டுகோள் விடுத்து உள்ளது.

ஸ்விகி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் ஓட்டல்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவுப்பொருட்களை டெலிவிரி செய்து வருகின்றன. தற்போது உள்ள சூழலில் அந்த நிறுவனங்கள் மளிகை கடைகளுடன் சேர்ந்து, மளிகை பொருட்களையும் பொது மக்களுக்கு டெலிவிரி செய்யுமாறு மாநகராட்சி யோசனை கூறியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்க இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து