மாவட்ட செய்திகள்

மாணவிகளை கிண்டல் செய்ததை கண்டித்த பெண் போலீசை தாக்கிய கல்லூரி மாணவர் கைது

மாணவிகளை கிண்டல் செய்ததை கண்டித்த பெண் போலீசை தாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தினத்தந்தி

கோவை,

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கலாசார விழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

அப்போது அங்கு நின்ற ஒரு மாணவர், சில மாணவிகளை கிண்டல் செய்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் அந்த மாணவரை கண்டித்து உள்ளார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த அந்த மாணவர், பெண் போலீசிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட அந்த பெண் போலீஸ், அந்த மாணவரை துரத்திச்சென்று மடக்கி பிடித்து, சக போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். இதில் அந்த மாணவர், கோவை கணபதி மாநகரை சேர்ந்த சேதுபதி (வயது 22) என்பதும், அந்த கல்லூரியில் எம்.எஸ்சி ஐ.டி. படித்து வருவதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சேதுபதி மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு