கரூர் 
மாவட்ட செய்திகள்

அமராவதி ஆற்றில் தண்ணீர் எடுத்த 15 மின் மோட்டார்கள் பறிமுதல்

அமராவதி ஆற்றில் தண்ணீர் எடுத்த 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினத்தந்தி

கரூர்,

கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று பகுதிகளில் குழாய் பதித்து மின்மோட்டார் மூலம் சட்டவிரோதமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து வருவதாகவும் எனவே அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன்படி மண்மங்கலம் தாசில்தார் ராதிகா மற்றும் அமராவதி வடிநில உப கோட்ட உதவி பொறியாளர் ராஜகோபால் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட தாளப்பட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அமராவதி ஆற்றில் குழாய் பதித்து மின் மோட்டார் மற்றும் ஆயில் என்ஜின் வைத்து சட்டவிரோதமாக நீரை உறிஞ்சி எடுத்து வந்த 15 மின் மோட்டார்கள் மற்றும் குழாய்களை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்