ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தபோது 
மாவட்ட செய்திகள்

பெருந்துறை பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி; தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

பெருந்துறை பேரூராட்சியில் எடப்பாடியார் நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

தினத்தந்தி

நிகழ்ச்சியில் பெருந்துறை தொகுதி தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பணியை தொடங்கி வைத்தார். மேலும் எஸ்.எல்.என்.நகர் பகுதியில் அமைக்கப்பட்ட 6 தெரு விளக்குகள் மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செல்லியம்மன் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட 7 தெரு விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

இதேபோல் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி எல்லப்பாளையம் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் சி.எம்.எஸ். வங்கி துணை தலைவர் ஜெகதீஸ், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் உமாமகேஸ்வரன், கூட்டுறவு சங்க தலைவர் மோகன்குமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.எம்.பழனிச்சாமி, கைலங்கிரி குப்புசாமி, துரைராஜ், நல்லசிவம், கிருஷ்ணமூர்த்தி, டெய்லர் ரவி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து