மாவட்ட செய்திகள்

ரூ.50 லட்சத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணி

கம்பம் நகராட்சி 1-வது வார்டு பகுதியில் ரூ.50 லட்சத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

கம்பம்:

கம்பம் நகராட்சி 1-வது வார்டு சுவாமி விவேகானந்தர் தெருவில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் சுந்தரி வீரபாண்டியன், சர்புதீன், இளம்பரிதி, குருகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் 7-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில் தி.மு.க. கம்பம் நகர பொறுப்பாளர் (வடக்கு) வக்கீல் துரைநெப்போலியன், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் வீரபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்