மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT