மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

மேலும் 31 பேர் சாவு

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்து 96 ஆயிரத்து 163 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 31 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 405 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று 1,937 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 28 லட்சத்து 36 ஆயிரத்து 678 பேர் குணம் அடைந்து உள்ளனர். 23 ஆயிரத்து 57 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்கள்.

5 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை

பெங்களூருவில் 467 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். தட்சிண கன்னடாவில் 357 பேர், மைசூருவில் 162 பேர் பாதிக்கப்பட்டனர். 22 மாவட்டங்களில் கொரேனா பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகி இருந்தது. 5 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

தட்சிண கன்னடாவில் 4 பேர், பெங்களூரு நகர், ஹாவேரி, மைசூரு, உத்தர கன்னடாவில் தலா 3 பேர், பெலகாவி, கோலார், மண்டியா, விஜயாப்புராவில் தலா 2 பேர், சிக்கமகளூரு, கதக், கலபுரகி, ராமநகர், சிவமொக்கா, துமகூரு, உடுப்பியில் தலா ஒருவர் இறந்தனர். 14 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு