மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்களில் கொரோனாவுக்கு 6 பேர் பலி சாவு எண்ணிக்கை 451 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 448 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல், திருச்செங்கோடு, வெப்படை பகுதிகளை சேர்ந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 ஆயிரத்து 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,264 ஆக அதிகரித்து உள்ளது.

595 பேருக்கு சிகிச்சை

இந்த நிலையில் நேற்று 53 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 46 ஆயிரத்து 218 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 595 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் சற்று அதிகரித்து உள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனாவுக்கு 6 பேர் இறந்து விட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

====

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்