மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் புதிதாக 1,338 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,338 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 400 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,338 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 21 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 31 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 1,947 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 61 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது. 22 ஆயிரத்து 676 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

பெங்களூரு நகரில் 315 பேர், தட்சிண கன்னடாவில் 378 பேர், மைசூருவில் 71 பேர், உடுப்பியில் 92 பேர், சிக்கமகளூருவில் 93 பேர், சிவமொக்காவில் 48 பேர், குடகில் 50 பேர், ஹாசனில் 47 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகர், ஹாசனில் தலா 3 பேரும், தட்சிண கன்னடாவில் 8 பேரும், துமகூரு, உத்தரகன்னடாவில் தலா 4 பேரும் என மொத்தம் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 1,186 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்து 1,338 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு