மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 54). விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஜெயராஜ் கடந்த 10 ஆண்டுகளாக வயிற்றுப்புண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தனியார் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் நேற்று மாலை மையத்தில் உள்ள தனி அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் குழந்தைகள் இல்லாத காரணத்தினாலும், வயிற்றுப்புண் நோயால் அவதிப்பட்டதாலும் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்