மாவட்ட செய்திகள்

கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு பாராட்டு - எடியூரப்பா மகிழ்ச்சி

கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து இருப்பதால் முதல்-மந்திரி எடியூரப்பா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைபடுத்துவது, வீடுகளில் ஆய்வு நடத்தி மக்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் சேகரிப்பது, செல்போன் அடிப்படையிலான சேவை உள்ளிட்ட கர்நாடக அரசின் நடவடிக்கையை மத்திய அரசு பாராட்டியுள்ளது.

கர்நாடக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த வெற்றியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பங்கு உள்ளது. அவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.

கைகோர்க்க வேண்டும்

ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பு குறித்து அரசு கூறும் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசுடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்