மாவட்ட செய்திகள்

கொரோனா பாதித்தவர் குணம் அடைந்தார்: நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் தடை நீக்கம்

கொரோனா பாதித்தவர் குணம் அடைந்தார்: நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் தடை நீக்கம் தடுப்புகள் அகற்றப்பட்டன.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் கடந்த மாதம் கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சீல் வைத்தனர். அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் இரும்பு தகடுகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தினர். தற்போது அந்த கர்ப்பிணி கொரோனாவில் இருந்து மீண்டும் குணமாகி வீடு திரும்பி விட்டார். மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து 28 நாட்கள் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே சுகாதாரத்துறையினர் அப்பகுதிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி விட்டனர். மேலும் இரும்பு தகடுகளால் ஏற்படுத்தப்பட்டு இருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே நாமக்கல் மஜித்தெரு, குட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் தடையை நீக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மஜித்தெரு, தட்டாரத்தெரு, குட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அகற்றப்பட்டன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு